செய்திகள்
ஹர்பஜன் சிங்

இவரை ஏன் தேர்வு செய்யவில்லை?: ஹர்பஜன் சிங் ஆதங்கம்

Published On 2019-09-30 11:20 GMT   |   Update On 2019-09-30 11:20 GMT
உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவை ஏன் தேர்வு செய்யவில்லை என ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணி 4-வது இடத்திற்கு சரியான பேட்ஸ்மேனை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் அந்த இடத்திற்கு சாத்தியமான நபர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடின பயிற்சி மேற்கொண்டு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வரும் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. உங்களுடைய நேரம் வரும்’’ என பதிவிட்டுள்ளார்.

நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக 31 பந்தில் 81 ரன்கள் குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

78 லிஸ்ட் ‘ஏ’ போட்டிகளில் 2081 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 34.1 ஆகும், 42 முதல்தர போட்டிகளில் 12 சதங்களுடன் 4818 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 43 ஆகும்.
Tags:    

Similar News