செய்திகள்

18 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி- சென்னையில் இன்று தொடக்கம்

Published On 2018-10-14 09:07 GMT   |   Update On 2018-10-14 09:07 GMT
இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் நடத்தும் 18 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராய நகரில் இன்று தொடங்குகிறது.
இந்தியன் வங்கி விளையாட்டு மற்றும் மனமகிழ் மன்றம் சார்பில் முதலாவது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. ‘இந்தியன் வங்கி டிராபி’க்கான இந்தப்போட்டி இன்று (14-ந்தேதி) முதல் வருகிற 20-ந்தேதி வரை தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் நடக்கிறது.

இந்தியன் வங்கி, வருமானவரி, சுங்க இலாகா, சுங்க இலாகா, சத்யபாமா, ஆல்ஸ்டார்ஸ் உள்பட 18 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன. ‘லீக்’ மற்றும் ‘நாக்அவுட்’ முறையில் போட்டி நடக்கிறது. இந்தப்போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சமாகும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசு தொகை வழங்கப்படும்.

இன்று மாலை 6 மணிக்கு இந்தப்போட்டியை இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு கமிட்டி தலைவரும், பொது மேலாளருமான எம். நாகராஜன் தொடங்கி வைக்கிறார். 20-ந்தேதி இரவு 7 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான பத்மஜா சந்துரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கி விளை யாட்டு செயலாளர் ஆர்.சீனி வாசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News