செய்திகள்

ரியோ பாராலிம்பிக் போட்டி: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெண்கலப் பதக்கம்

Published On 2016-09-10 03:12 GMT   |   Update On 2016-09-10 03:12 GMT
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ரியோ டி ஜெனிரோ:

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான வருண் பட்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உயரம் தாண்டுதல் போட்டியில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News