செய்திகள்
அதிக சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு ஃபிளிப் போன்: விரைவில் வெளியிடும் சாம்சங்
சாம்சங் நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு ஃபிளிப் போன் ஒன்றை தயாரித்து வருவதாகவும், விரைவில் இந்த போன் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனம் ஃபிளிப் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த போனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கேலக்ஸி S8 மற்றும் S8 பிளஸ் போன்களை நினைவூட்டும் வகையில் உயர் ரக சிறப்பம்சங்கள் கொண்டு தயாராகும் ஃபிளிப் போன் SM-W2017 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வயர்லெஸ் சார்ஜிங் வசதிக்கான சான்றினை சமீபத்தில் பெற்றிருக்கும் SM-W2017 போனில் கைரேகை ஸ்கேனர், வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட், சாம்சங் நாக்ஸ் மற்றும் சாம்சங் பே சேவைகளை இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.2 இன்ச் OLED ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகின்றது மெமரியை கூடுதலாக நீட்டிப்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
2300 எம்ஏஎச் திறன் கொண்டு சக்தியூட்டப்படும் சாம்சங் ஃபிளிப் போன் ஸ்பெஷல் எடிஷனாக வெளியிடப்படலாம் என்றும் இதன் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் தற்சமயம் வரை வெளியாகவில்லை.