இந்தியா

ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை கொலை செய்த இளம்பெண்

Published On 2023-02-16 07:43 GMT   |   Update On 2023-02-16 07:43 GMT
  • ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது கோபியின் அண்ணன் ராஜுடன் குமாரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதில் உடன்பாடு இல்லாத ராஜு இது தவறான உறவு என கூறி வந்தார். இருப்பினும் ராஜுவின் அறிவுரையை பொருட்படுத்தாத குமாரி கணவர் இல்லாத ஆசையை நிறைவேற்ற கோரி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.

ஒரு கட்டத்தில் ராஜு கள்ளத்தொடர்புக்கு மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தனது ஆசையை நிறைவேற்ற மறுக்கும் மைத்துனரை கொலை செய்ய குமாரி முடிவு செய்தார்.

இதையடுத்து 2 வாலிபர்களை அழைத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த ராஜுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் வாலிபர்கள் உதவியுடன் ராஜுவின் உடலை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தார்.

ராஜு திடீரென காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பஞ்சாயத்து கூட்டி குமாரியிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர் பஞ்சாயத்தாரரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார்.

ஆசைக்கு இணங்க மறுத்ததால் மைத்துனரை வாலிபர்கள் உதவியுடன் கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குமாரியை சராமாரியாக அடித்து உதைத்தனர்.

பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர்.

மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News