இந்தியா

உத்தரபிரதேசத்தில் வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு

Published On 2023-08-07 13:49 IST   |   Update On 2023-08-07 13:49:00 IST
  • ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது.
  • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோரக்பூர்:

கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. உத்தரபிரதேச மாநிலம் பரபாங்கி சாதாபாத் ரெயில் நிலையம் அருகே சென்ற போது திடீரெனெ ரெயில் மீது கற்கள் வீசப்பட்டது. இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த கல்வீச்சில் ஈடுபட்டது யார்?என்று தெரியவில்லை.

இது தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News