இந்தியா

3 காரணங்களுக்காக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன்- சசிதரூர் எம்.பி. பரபரப்பு பேட்டி

Published On 2022-09-30 05:54 GMT   |   Update On 2022-09-30 05:54 GMT
  • திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன்.
  • நான் ஐ.நா.சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

திருவனந்தபுரம்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.

இந்த தேர்தலில் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் போட்டியிடுகிறார்.

இன்று அவர் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஜனநாயக போட்டியே கட்சியை பலப்படுத்தும். இதனை கட்சியின் இப்போதைய தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பலமுறை கூறியுள்ளனர்.

2-வதாக காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளில் இருந்து கட்சியை பலப்படுத்தவும், சீர்ப்படுத்தவும், தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தேன்.

3-வதாக தலைமை பொறுப்புக்கு போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்த பின்பு அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். எனவே தான் இப்போட்டியில் பங்கேற்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான் ஐ.நா.சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News