இந்தியா

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீர் செல்கிறார்

Published On 2023-05-06 13:00 IST   |   Update On 2023-05-06 13:00:00 IST
  • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஜோரி செல்கிறார்.
  • ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலியானார்கள். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மேலும் அங்குள்ள நிலைமை குறித்து அறியவும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஜோரி செல்கிறார்.

இதே போல ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயும் அங்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News