இந்தியா

ஆந்திராவில் பிரபலமாகும் எலி ஜோதிடம்

Published On 2025-09-13 10:14 IST   |   Update On 2025-09-13 10:14:00 IST
  • சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார்.
  • ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலத்தில் உள்ள எஸ்.வி.புரம் அஞ்சேரம்மா கோவிலில் எலி ஜோதிடம் சொல்லுதல் பலரையும் கவர்ந்து வருகிறது.

நாராயணவனம் கிராமத்தில் வசிக்கும் சித்தமுனி என்பவர் 30 வருடங்களாக ஒரு கிளியை வைத்து ஜோதிடம் கூறி வந்தார். ஒரு வருடம் முன்பு சென்னைக்கு சென்றபோது அங்கு ஒருவர் எலி ஜோதிடம் சொல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

எனவே அங்கிருந்து பயிற்சி பெற்ற எலியை வாங்கி வந்தார். சிறிது காலம் பிறகு உள்ளூர் கோவிலில் எலியைக் கொண்டு ஜோதிடம் சொல்லத் தொடங்கினார். இந்த எலியின் பெயர் கணேஷ். எலி விநாயகரின் வாகனம் என்பதால் பலரும் ஜோதிடம் பார்க்க வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News