இந்தியா

புனேயில் சூறாவளி காற்று போன்று சுழன்ற கொசுக்கள்

Published On 2024-02-12 08:46 IST   |   Update On 2024-02-12 08:46:00 IST
  • மூன்று நான்கு நாட்களாக இதுபோன்ற நிகழ்வதாக உள்ளூர்வாசி தகவல்.
  • புனே மாநகராட்சி கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை அடிக்கடி சூறாவளி காற்று தாக்கும். அப்போது திடீரென காற்று பூமியில் உள்ள மண்ணை எடுத்துக் கொண்டு அப்படியே சுழன்று அடிக்கும். அப்போது கையிறு திரித்தல் போன்று வான் அளவிற்கு அப்படியே செல்லும். அதேபோல் கடலில் சுறாவளி ஏற்பட்டாலும், திடீரென காற்று கடல் நீரை அவ்வாறு எடுத்துச் செல்லும்.

இது சூறாவளியின் போது நடப்பது சகஜம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கேஷவ்நகர் மற்றும் காரடி பகுதிகளில் திடீரென கொசுக்கள் இவ்வாறு சூறாவளி போன்று சுழன்று சென்றது அங்குள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கொசுக்கம் மக்கள் வாழும் இடத்திற்குள் நுழைந்தால் என்ன ஆவது? என கேள்வி எழுப்பியதோடு, சுகாதாரம் குறித்து கவலை அடைந்தனர். மேலும், புனே நிர்வாகம் உடனடியாக கொசுக்களை கட்டுப்படும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

முலா முதா ஆற்றின் நீர் அளவு உயர்வு இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரடி பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பகுதியில அதிக அளவிலான கொசுக்கள் உள்ளன. புனே மாநகராட்சி இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இது உடல் நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது" என்றார்.

காரடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில் "சமீபத்தில் நான் அதிகப்படியான கொசுக்களை பார்க்கிறேன். கடந்த மூன்று நான்கு நாட்களாக இதுபோன்ற கொசு சூறாவளி சம்பவம் நடந்துள்ளது. இது கடினமான ஒன்றாகியுள்ளது. இது உடல் நலத்திற்கு தங்கு விளைவிக்கும்" என்றார்.

Similar News