தொடர்ந்து 3-வது நாளாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
- பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டார்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் எல்லையில் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் 3-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இது குறித்து இந்திய ராணுவம் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 26, 27-ந்தேதி நள்ளிரவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் செக்டார்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் கொடுத்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.