இந்தியா

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தவித்த 438 பேர் மீட்பு

Published On 2023-03-10 10:27 GMT   |   Update On 2023-03-10 10:27 GMT
  • காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே இடையே 434 கி.மீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர்.
  • இந்திய விமான படை மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே இடையே 434 கி.மீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர். பனிச்சரிவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த நெடுஞ்சாலையில் சிக்கி தவிக்க நேரிட்டது. இதையடுத்து இந்திய விமான படை மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 438 பேர் விமானப்படை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

ஸ்ரீநகர் பகுதியில் 260 பேர் மீட்கப்பட்டு லே பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:    

Similar News