இந்தியா

உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொலை செய்த ஆட்டோ டிரைவர்

Published On 2023-06-03 06:39 GMT   |   Update On 2023-06-03 06:39 GMT
  • ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது.
  • ஜான்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாதவத் தருண் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜான்சி(20) இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஜாதவத் தருண் தனது மனைவியுடன் ஐதராபாத்துக்கு குடி பெயர்ந்தார். ஐ.எஸ். சதன் பிரிவில் உள்ள காஜாபாக்கில் அவர்கள் வசித்து வந்தனர்.

தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் ஜான்சிக்கு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு கணவன், மனைவி இருவரும் தனிமையில் இருந்தனர்.

அப்போது ஜாதவத் தருண் ஜான்சியை உல்லாசத்திற்கு அழைத்தார். குழந்தைகளை கவனித்ததால் உடல் சோர்வாக உள்ளது எனக் கூறிய ஜான்சி மறுப்பு தெரிவித்தார்.

ஆனாலும் மனைவியை தொடர்ந்து வற்புறுத்தினார்.

ஜான்சி மறுத்ததால் அவரிடம் அத்துமீற தொடங்கினார்.

இதனால் ஜான்சி கத்தி கூச்சலிட்டார். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஜாதவத் தருண் தனது மனைவியின் வாயை கையால் பொத்தினார். அப்போது மூக்கையும் சேர்த்து அழுத்தினார்.

இதனால் ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது. அவர் சுயநினைவை இழந்தார். இதனை கண்டு திடுக்கிட்ட ஜாதவத் தருண் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.

இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக ஓவைசி மருத்துவமனைக்கு ஜான்சியை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜான்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜான்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது மனைவி திடீரென இறந்து விட்டதாக ஜாதவத் தருண் தெரிவித்தார். ஆனால் ஜான்சியின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து ஜான்சியின் தந்தை சைதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ஜான்சி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தருணை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ஜாதவத் தருணை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News