இந்தியா

ஆந்திராவில் 35 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர்

Published On 2022-12-08 06:44 GMT   |   Update On 2022-12-08 06:44 GMT
  • மாவோயிஸ்டுகள் அல்லூரி சீதா ராம ராஜூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் முன்னிலையில் படேரு பகுதியில் சரண் அடைந்தனர்.
  • பெண் மாவோயிஸ்டு சிலோ இந்து என்கிற கெம்மேலி பாரதி என்பவரும் சரண் அடைந்தார்.

விசாகப்பட்டினம்:

ஆந்திராவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 35 பேர் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் அல்லூரி சீதா ராம ராஜூ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார் முன்னிலையில் படேரு பகுதியில் சரண் அடைந்தனர்.

இவர்களில் பெண் மாவோயிஸ்டு சிலோ இந்து என்கிற கெம்மேலி பாரதி என்பவரும் அடங்குவார். இவர் கொலை, துப்பாக்கி சூடு, போலீசாரை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர். இவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் நேற்று வரை சரண் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News