இந்தியா

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் கணவர்களால் கொல்லப்பட்ட 30 மனைவிகள்- அதிர்ச்சி தகவல்கள்

Published On 2025-06-24 14:31 IST   |   Update On 2025-06-24 14:31:00 IST
  • சராசரியாக 4 நாட்களுக்கு ஒரு பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
  • 30 கொலைகளில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடத்தை சந்தேகத்தாலும், 6 கொலைகள் போதையிலும் நடந்துள்ளது.

மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராஜாரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் பரப்பப்படுகிறது.

ஆனால் சத்தீஸ்கரில் கடந்த 115 நாட்களில் மட்டும் 30 மனைவிகள் கணவன்மார்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, சராசரியாக 4 நாட்களுக்கு ஒரு பெண் தனது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த 30 கொலைகளில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடத்தை சந்தேகத்தாலும், 6 கொலைகள் போதையிலும் நடந்துள்ளது. மற்ற கொலைகள் குடும்ப வன்முறை, வரதட்சணை பிரச்சனை, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் நடந்துள்ளது.

Tags:    

Similar News