செய்திகள்
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
ஐதராபாத்:
புதுவை, தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 78) இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை பகிர்ந்துள்ள இரங்கல் பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்துசென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவுக்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் என் தாயார்.
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
புதுவை, தெலுங்கானா கவர்னர் தமிழிசையின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 78) இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
இதுகுறித்து கவர்னர் தமிழிசை பகிர்ந்துள்ள இரங்கல் பதிவில், என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்துசென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க்கையில் நீ எந்த அளவுக்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் என் தாயார்.
என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு