செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டையும் கைதான 2 பேரையும் படத்தில் காணலாம்

ராஜஸ்தானில் ரூ.4.77 கோடி கள்ள நோட்டு சிக்கியது - 2 பேர் கைது

Published On 2019-09-19 05:48 GMT   |   Update On 2019-09-19 05:48 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ.4.77 கோடி கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அக்கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்தனர்.

இது தொடர்பாக கெம்சந்த், ராஜேஷ்பன்கர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4.77 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பொம்மை துப்பாக்கி, ஏ.டி.எம். கார்டுகள் போலி முத்திரைகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் இருவரும் ஏற்கனவே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News