செய்திகள்

கொழும்பு குண்டு வெடிப்பு: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்- சுஷ்மா சுவராஜ்

Published On 2019-04-21 05:41 GMT   |   Update On 2019-04-21 06:32 GMT
கொழும்பில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்ததையொட்டி, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #ColomboAttack #SriLanka
கொழும்பில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ‘5 ஸ்டார்’ ஓட்டல்களில் இன்று காலை அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் நான் தொடர்ந்து பேசி அங்குள்ள சூழ்நிலையை குறித்து கேட்டு வருகிறேன். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.



மேலும், உதவிக்கான நம்பர்களையும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News