செய்திகள்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின

Published On 2019-03-11 08:49 IST   |   Update On 2019-03-11 08:49:00 IST
அந்தமான் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். #AndamanEarthquake
போர்ட்பிளேர்:

அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #AndamanEarthquake
Tags:    

Similar News