செய்திகள் (Tamil News)

88 உயிர்களை பறித்த அசாம் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

Published On 2019-01-28 08:30 GMT   |   Update On 2019-01-28 08:30 GMT
அசாம் மாநிலத்தில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் போடோலாந்து இயக்கத்தலைவர் உள்பட 15 பேரை குற்றவாளிகளாக சிபிஐ கோர்ட் இன்று அறிவித்துள்ளது. #CBICourt #Assamserialblast
கவுகாத்தி:

அசாம்  மாநிலத்தின் தலைநகரான கவுகாத்தி மற்றும் கோக்ரஜார், பான்கைகவ்ன், பார்பேட்டா ஆகிய பகுதிகளில் கடந்த 30-10-2008 அன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 88 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் பலர்மீது குற்றம்சாட்டி கவுகாத்தி நகரில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்து சி.பி.ஐ. நீதிமன்ற சிறப்பு நீதிபதி  அபரேஷ் சக்ரபர்த்தி இன்று தீர்ப்பளித்தார்.

போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி இயக்கத்தின் தலைவர் ரஞ்சன் டைமரி உள்பட 15 பேரை இவ்வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விபரம் வரும் 30-ம் தேதி தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #CBICourt #Assamserialblast
Tags:    

Similar News