செய்திகள்

அருணாசலப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி பாஜகவில் இருந்து திடீர் விலகல்

Published On 2019-01-16 10:21 GMT   |   Update On 2019-01-16 10:21 GMT
அருணாசலப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான கெகாங் அபாங் நேற்று பாஜகவில் இருந்து திடீரென விலகினார். #ArunachalPradesh #BJP #GegongApang
இடாநகர்:

அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் கெகாங் அபாங். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான கெகாங் அபாங் நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். 



இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு கெகாங் அபாங் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தற்போதைய பா.ஜ.க.வின் நிலை கண்டு நான் மிகவும் வருத்தம் அடைகிறேன். வாஜ்பாய் அவர்களின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றுவதில்லை. ஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே அது குறியாக உள்ளது என தெரிவித்துள்ளார். #ArunachalPradesh #BJP #GegongApang
Tags:    

Similar News