செய்திகள்

வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 28,523

Published On 2018-12-12 11:48 GMT   |   Update On 2018-12-12 11:48 GMT
வளைகுடா நாடுகளில் கடந்த நான்காண்டுகளில் 28 ஆயிரத்து 523 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. #28523Indians #IndiansdiedinGulf #GulfIndians
புதுடெல்லி:

இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் சாலை விபத்துகளிலும், உடல் நலக்குறைவாலும், தற்கொலை செய்தும் மரணம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு கடந்த நான்காண்டுகளில் வளைகுடா நாடுகளில் 28 ஆயிரத்து 523 இந்தியர்கள் உயிரிழந்ததாக பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இதற்கான புள்ளி விபரங்களை தெரிவித்தார்.


2014-2018-க்கு இடைப்பட்ட இந்த நான்காண்டுகளில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 12 ஆயிரத்து 828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், பஹ்ரைனில் 1,021 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும்  வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 6,013 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #28523Indians #IndiansdiedinGulf #GulfIndians
Tags:    

Similar News