செய்திகள்

பயணியின் பைக்குள் இருந்த விஷப்பாம்பு- விமான நிலையத்தில் பரபரப்பு

Published On 2018-11-13 10:28 GMT   |   Update On 2018-11-13 10:28 GMT
அபுதாபி செல்ல வேண்டிய பயணியின் லக்கேஜில் விஷப்பாம்பு இருந்ததால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #CochinAirport
கொச்சி:

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அபுதாபி செல்ல வேண்டிய பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது, ஒரு லக்கேஜை ஸ்கேன் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதற்குள் ஏதோ ஒன்று ஊர்வதைக் கண்டனர்.

அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த லக்கேஜ் பாலக்காடைச் சேர்ந்த சுனில் என்பவருடையது என தெரியவந்தது.  லக்கேஜை எடுக்க வந்த சுனிலிடம் பாதுகாப்பு படையினர் பிரித்து சோதனை செய்ய வேண்டும் என்றனர்.


சரி என்ற சுனில் லக்கேஜில் இருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து கருப்பு நிறத்தில் குட்டி பாம்பு ஒன்று வெளியே எட்டிப்பார்த்தது.  இதைக் கண்டு பயணி சுனில் உட்பட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டித் தந்ததாக தெரிவித்தார். மற்றபடி பாம்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சுனில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர்.   #CochinAirport
Tags:    

Similar News