செய்திகள்

வங்கிப் பணியாளர்கள் மே 30, 31 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

Published On 2018-05-26 11:31 GMT   |   Update On 2018-05-26 11:31 GMT
9 சங்கங்களை சேர்ந்த தலைமை அமைப்பான வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வரும் 30, 31 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. #BankStrike
சிம்லா:

வங்கி பணியாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கத்தின் தாமதம் மற்றும் அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து வரும் 30, 31 தேதிகளில்  வேலைநிறுத்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பின் இமாச்சலப்பிரதேசம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம் வெர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய வங்கிகள் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2 சதவீத சம்பள உயர்வும்,  சில வங்கிகளில் மூன்றாம் படிநிலை பணியாளர்கள் வரைதான் அளிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் எங்கள் அமைப்புக்கு உட்பட்ட 9 சங்கங்களின் சார்பாக இந்த போராட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.#BankStrike
Tags:    

Similar News