செய்திகள்

இளைஞரை ஜீப்பில் கட்டிய ராணுவ மேஜர் ஓட்டலில் இளம்பெண்ணுடன் நுழைய முயன்று ரகளை

Published On 2018-05-24 04:00 GMT   |   Update On 2018-05-24 04:00 GMT
காஷ்மீரில் இளைஞரை ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்று பரபரப்பை ஏற்படுத்திய ராணுவ மேஜர், ஓட்டல் ஒன்றில் இளம்பெண்ணுடன் நுழைய முயன்று ரகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதிக்கு கடந்தாண்டு நடந்த இடைத்தேர்தலின் போது, பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது, ராணுவ மேஜர் லீதுல் கோகோய் அங்குள்ள இளைஞரை பிடித்து தனது ஜீப்பில் கட்டி ஊர்வலமாக சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு இளம்பெண்ணுடன் லீதுல் கோகோய் சென்றுள்ளார். ஆனால், அந்த பெண் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், ஓட்டல் நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை அடுத்து, கோகோய் மற்றும் அவரது டிரைவர் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், கோகோயை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News