செய்திகள்

பீகாரில் உயரழுத்த மின்கம்பி அறுந்து பள்ளி வேன் மீது விழுந்ததில் 2 குழந்தைகள் பலி

Published On 2018-05-16 11:20 GMT   |   Update On 2018-05-16 11:20 GMT
பீகார் மாநிலத்தின் பானியாபுர் பகுதியில் இன்று உயரழுத்த மின்கம்பி அறுந்து கீழே சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
பீகார்:

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் இன்று பள்ளி சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 11 குழந்தைகள் மீது காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News