செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட பெண் பஞ்சாயத்து உறுப்பினர் சுட்டுக் கொலை

Published On 2018-05-05 09:32 GMT   |   Update On 2018-05-05 09:32 GMT
உத்தரப்பிரதேசத்தில் பெண் பஞ்சாயத்து உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#Womanpanchayatmember #killed
லக்னோ:

உத்தரப்பிரதேசம், லகிம்பூர் கேரி பகுதியில் பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பவர் கிரண் வர்மா. இவர் தனது கணவர் அமர் சிங்கின் தங்கையின் கணவர் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர்.

அப்போது கிரண், அவரது கணவர் அமர்சிங்  மற்றும் அமர் சிங்கின் தங்கையின் கணவர் சிவ பிரதாப் சிங்குக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரதாப் சிங், தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் கிரண் வர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் பிரதாப் சிங்கை கைது செய்து அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். குற்றவாளியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கிரண், பிரதாப் சிங் உடன் தகாத உறவு வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Womanpanchayatmember #killed
Tags:    

Similar News