செய்திகள்
லூதியானா சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
லூதியானாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #cylinderblast #Ludhianacylinderblast
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சாம்ராட் காலணி என்ற பகுதியில் கடந்த வாரம் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஷோக் குமார் யாதவ் என்பவரது மனைவி சுனிதா உட்பட 3 பேர் சம்பவத்தன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் காயமடைந்தவர்களது சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cylinderblast
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சாம்ராட் காலணி என்ற பகுதியில் கடந்த வாரம் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அஷோக் குமார் யாதவ் என்பவரது மனைவி சுனிதா உட்பட 3 பேர் சம்பவத்தன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மேலும் காயமடைந்தவர்களது சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சிலிண்டர் விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #cylinderblast