கதம்பம்

இசை வைத்தியம்

Published On 2022-08-21 15:47 IST   |   Update On 2022-08-21 15:47:00 IST
  • இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்.
  • நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி.

இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் "தீபக்" என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.

நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப்பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.

*அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் – பூபாளம்.

பாடல்: சலங்கயிட்டால் ஒரு மாது..

பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..

*அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் – மலையமாருதம், சக்கரவாகம்.

பாடல்: கண்மணி நீ வர காத்திருந்தேன்.. – மலையமருதம் ராகம்.

பாடல்: நீ பாதி நான் பாதி கண்ணே.. – சக்கரவாகம் ராகம்

பாடல்: பூப்பூக்கும் மாசம் தை மாசம்.. – மலையமாருதம்

பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம்.. – சக்கரவாகம்

பாடல்: ஓராறு முகமும் ஈராறு கரமும்..

பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..

* சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி.

பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு..

* கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய – அரிகாம் போதி.

பாடல்: கண்ணுக்கு மை அழகு..

பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்..

பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்..

பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்..

*மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி.

பாடல்: நாதம் எழுந்ததடி.. – ஸ்ரீ ரஞ்சனி

பாடல்: வசந்த காலங்கள் இசைந்து.. – ஸ்ரீ ரஞ்சனி

பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு.. – ஆனந்த பைரவி

பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள்.. – ஆனந்த பைரவி

பாடல்:வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி.. – நீலாம்பரி

பாடல்: பூவே இளைய பூவே.. – நீலாம்பரி

பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை.. – கமாஸ்

* மனம் சார்ந்த பிரச்சனை தீர – அம்சத்வனி, பீம்பிளாஸ்.

பாடல் : காலம் மாறலாம் நம் காதல் .. – அம்சத்வனி

பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம்.. – பீம்பிளாஸ்

பாடல்: தோகை இளமயில் ஆடி வருகுது.. – அம்சத்வனி

பாடல்: வா…வா…வா… கண்ணா வா.. – அம்சத்வனி

பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை.. – பீம்பிளாஸ்

பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்..

பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா..

பாடல்: வாராய் நீ வாராய்..

*இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – சந்திரக கூன்ஸ்.

*நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் – பகாடி,ஜகன் மோகினி.

*பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான.

பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம்.. – அடான

பாடல்: வருகிறார் உனைத் தேடி.. – அடான

*மனதை வசீகரிக்க, மயக்க – ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா.

பாடல்: தானா வந்த சந்தனமே.. – கரகரப்பிரியா

பாடல்: கம்பன் எங்கே போனான்.. – கரகரப்பிரியா

பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு.. –ஆனந்த பைரவி.

பாடல்:சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா.. – கரகரப்பிரியா

பாடல்: மாதவிப் பொன் மயிலாள்.. – கரகரப்பிரியா

*சோகத்தை சுகமாக்க – முகாரி , நாதநாமக்கிரியா.

பாடல்: கனவு கண்டேன் நான்.. – முகாரி

பாடல்: சொல்லடி அபிராமி..

பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு..

* வாயுத்தொல்லை தீர – ஜெயஜெயந்தி ராகம்.

* வயிற்றுவலி தீர – நாஜீவதாரா ராகம்..

-சமரன் நாகன்

Tags:    

Similar News