உண்மை எது

அதற்கு கட்டணம் கிடையாது - மின்சார ஒழுங்குமுறை ஆணைய அறிவிப்பால் பொது மக்கள் நிம்மதி!

Published On 2023-05-02 02:54 GMT   |   Update On 2023-05-02 02:54 GMT
  • மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
  • மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.

அதாவது குளிர்தான பெட்டி (ஃப்ரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), வாட்டர் ஹீட்டர் போன்று அதிக மின்சாரம் பயன்படுத்தும் மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

தமிழ் நாட்டில் மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஏசி, வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதன பொருட்கள் பயன்படுத்தும் வீடுகளில் தேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இது போன்ற தேவைக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News