செய்திகள்

சென்னையில் 10-ந்தேதி பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து மாயாவதி பிரசாரம்

Published On 2019-04-07 15:52 IST   |   Update On 2019-04-07 15:52:00 IST
தமிழ்நாடு மற்றும் புதுவையில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி 10-ந்தேதி சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். #Mayawati

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வருகிற 10-ந்தேதி சென்னை வருகிறார்.

அவர், தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். இதற்கான பொதுக்கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 10-ந்தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்தில் மாயாவதி கலந்து கொண்டு தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 40 பேரையும் அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

கூட்டத்தில் கட்சியின் தேசிய நிர்வாகிகள், எம்.பி.க் கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இதனை தொடர்ந்து மாயாவதி பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுக்கு யானை சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை வரும் மாயாவதியை வரவேற்க தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். #Mayawati

Tags:    

Similar News