உள்ளூர் செய்திகள்

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-01-23 15:12 IST   |   Update On 2023-01-23 15:12:00 IST
  • இவர்களுக்கு தேவதர்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.
  • வீட்டை விட்டு வெளியே சென்ற நித்யா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகேயுள்ள ஒபினி நாயக்கன் அள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி நித்யா (வயது 35). இவர்களுக்கு தேவதர்சினி என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த 15-ந்தேதி அன்று குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற நித்யா அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து கடத்தூர் போலீசில் ரவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான நித்யாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News