உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2022-07-30 05:22 GMT   |   Update On 2022-07-30 05:22 GMT
  • மது பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துரையைச் சேர்ந்தவர் வெயில்முத்து (வயது 48). கூலித் தொழி லாளி.

இவர் மது பழக்கத்துக்கு அடிமையா னவர். இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்று மதுவில் விஷம் கலந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கடமலைக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News