உள்ளூர் செய்திகள்

வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்

Published On 2023-09-15 08:02 GMT   |   Update On 2023-09-15 08:02 GMT
  • 1,182 வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கலெக்டர் வழங்கினார்.
  • இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரணி பள்ளியில் கர்ப் பிணிகள், மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங் கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி னார்.

பின்னர், அவர் பேசியதாவது:-

இரும்புப் பெண்மணி திட்டம் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை மூலம் ஊட்டச்சத்து பெட்ட கங்கள் வழங்கப்பட்ட2-இரண்டாம் கட்டமாக இந்த திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் 43,755 வளரிளம் பெண்களுக்கு ரத்தசோகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 18,677 மாணவி களுக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப் பட்டது. ரத்தசோகை குறை பாடுள்ளவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது. தீவிர ரத்தசோகை உள்ள 1,182 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக திருச்சுழி தொகுதியில் உள்ள 18 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவிகள், 7 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைப் போல மாவட்டத்தின் மற்ற வட்டாரங்களில் தீவிர ரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஊட்டச்சத்து பெட்ட கத்தினை பெற்றோர்கள் மூலம் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலை யங்களில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு மாதந்தோறும் ஒரு ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப் படும். 3-வது மாத முடிவில் மதிப்பீடு செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். எனவே இரும்பு சத்து குறைபாட்டை போக்க தற்போது வழங்கப் பட்டு வரும் மாத்திரைகள் ஊட்டச்சத்து பொருட்க ளோடு, அன்றாட உணவில் சமச்சீரான ஊட்டச் சத்துக்கள் அடங்கிய உணவுகளை உட்கொண்டு வரும் பட்சத்தில் ரத்த சோகை குறைபாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News