தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது
- விருதுநகர் தொழிலாளி கொலையில் தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி முத்து.இவர்களது மகன் அஜித்குமார்.
விருதுநகர் தெப்பம் பகுதியில் முனியாண்டி மனைவி முத்து ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்த சவுந்தரராஜன் (48) என்பவருக்கு தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் முத்து ரூ. 3லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்ராஜன் வட்டி பணத்தை கொடுக்கவில்லை.
இது தொடர்பாக பேச, சவுந்தர்ராஜன் நேற்று முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த முனியாண்டி, மகன் அஜித்குமார் ஆகியோர் கடன் தொடர்பாக வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த தந்தை-மகன் 2 பேரும் சவுந்தர்ராஜனை சரமாரியாக அடித்து தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சவுந்தர்ராஜன் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக சின்னமூப்பம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சமயன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டி, அவரது மகன் அஜித்குமாரை கைது செய்தனர்.