உள்ளூர் செய்திகள்

குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலையில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

Published On 2023-11-30 15:00 IST   |   Update On 2023-11-30 15:00:00 IST
  • பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நடவடிக்கை
  • 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைமுறை

குடியாத்தம்:

குடியாத்தம் நெடுஞ்சாலை உள் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகொண்டா பலமநேர் சாலையில் சிறுபா லம் கட்டும் பணி நடைபெ றுவதால் வருகிற 9, 10 ஆகிய 2 நாள்கள் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்.

அதன்படி, குடியாத் தத்தில் இருந்து பள்ளி கொண்டா வழியாக வேலூர் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 75-ல் வடுகந்தாங்கல் மற்றும் காட்பாடி வழியாகச் செல்லலாம்.

வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 48–-ல் செதுவாலை - விரிஞ் சிபுரம் -வடுகந்தாங்கல் வழியாகச் செல்லலாம்.

குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்பவர்கள் குடியாத்தம் மேல்பட்டி சாலையில் சென்று உள்ளி கூட்டுச் சாலை மும்முனை சந்திப்பு மாதனூர்வழியாகச்சென்று ஒடுகத்தூர், அணைக்கட்டு அதைச் சுற்றியுள்ள ஊர்க ளுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News