உள்ளூர் செய்திகள்

வாலிபர் திடீர் சாவு

Published On 2023-05-16 15:43 IST   |   Update On 2023-05-16 15:43:00 IST
  • சிகரெட் தீ படுக்கையில் பற்றி எரிந்தது
  • புகை மூச்சு திணறி இறந்தார்

வேலூர், மே.16-

வேலூர், தோட்டப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.

மேலும் லாட்ஜை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். விக்னேஷ் நேற்று மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார்.

அப்போது சிகரெட் பிடித்தபடி தூங்கியதாக கூறப்படுகிறது. தூக்க கலக்கத்தில் விக்னேஷ் சிகரெட்டை படுக்கையில் போட்டுள்ளார்.

அப்போது சிகரெட் மெத்தையில் பட்டு தீப்பிடித்து புகை வந்து அறை முழுவதும் பரவியது. மது போதையில் இருந்ததால் விக்னேஷ்விற்கு புகை சூழ்ந்தது தெரியவில்லை.

அறைக்கு வெளியேயும் புகை வந்ததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார்.

அறை முழுவதும் புகைப்பரவி விக்னேஷ் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷுக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர்.

Tags:    

Similar News