உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செல்போன்களை திருடி விற்று மது குடித்த வாலிபர்கள்

Published On 2022-12-20 15:35 IST   |   Update On 2022-12-20 15:35:00 IST
  • வேலூரில் 2 பேர் கைது
  • 4 செல்போன்கள் பறிமுதல்

வேலூர்:

வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் ஓய்வு அறை மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தப்பட்ட கார்களில் இருந்த செல்போன்கள் திருடு போனது.

இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் குல்லா மற்றும் மாஸ்க் அணிந்து வந்து டாக்டர்கள் அறை மற்றும் கார்களில் செல்போன் திருடியது. மற்றும் ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு பகுதியில் நடமாடியது பதிவாகி இருந்தது.

இதன் மூலம் குற்றவாளிகளை போலீசார் அடையாளம் தெரிந்து கொண்டனர். இது குறித்து தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள காவலர்களுக்கும் படங்களை அனுப்பி கண்காணிக்க உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் செல்போன் திருடர்கள் இருவரும் தனியார் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் புகுந்தனர்.

அவர்களை அடையாளம் கண்ட ஆஸ்பத்திரி காவலர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த கார்த்தி (வயது 22) ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி (45) என்பது தெரிய வந்தது.

மது போதைக்கு அடிமையான இவர்கள் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் செல்போனை திருடி ரூ.1000 முதல் 2000 வரை விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தில் மது குடித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பணம் தீர்ந்து விட்டதால் மீண்டும் அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு செல்போன் திருட வந்த போது பிடிபட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரவி கார்த்தி இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News