உள்ளூர் செய்திகள்
- ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து துணிகரம்
- வாலிபர் கைது
வேலூர்:
குடியாத்தம் - வேலூர் ரோட் டில் உள்ள நகராட்சி மேல் நிலைப்பள்ளி பின்புறம் குடியாத்தம் டவுன் போலீ சார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த குடி யாத்தம் ஆர்எஸ் நகரை சேர்ந்த குமார் (வயது 27) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் குமார் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து இங்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.