உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் மதுவிலக்கு அதிகாரி திடீர் ஆய்வு

Published On 2023-11-30 13:05 IST   |   Update On 2023-11-30 13:05:00 IST
  • வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
  • ரகளையில் ஈடுப்பட்டு வருவதாக புகார்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது.

இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று மதுவிலக்கு துறை அதிகாரியான முருகன், திடீரென ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது அங்கு உள்ள குடியிருப்பு வாசிகளிடம் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள், "நாங்கள் இங்கு வசிக்கவே கடினமாக உள்ளது. வீட்டின் முன்பாக குடித்து விட்டு ரகளையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எங்களால் இங்கு குடியிருக்க முடியவில்லை, பள்ளிகுழந்தைகள் வீட்டிற்கு வரும் போது பயந்து அங்கேயே நின்று விடுகின்றனர். இதனால் மது கடையை மாற்றகோரி வலியுறத்தினர்.

அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி உட்பட பொதுமக்கள் இருந்தனர்.

Tags:    

Similar News