உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி பணிகளுக்காக ரூ. 2.18 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2022-11-29 14:43 IST   |   Update On 2022-11-29 14:43:00 IST
  • அணைக்கட்டு ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

அணைக்கட்டு:

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது.

மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் 15-வது நிதிக்குழுவில் இருந்தும், பொது நிதியிலிருந்தும் தலா ஒரு கவுன்சிலருக்கு ரூ. 8.40 லட்சம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வ தற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஒன்றிய கவுன்சிலர்கள் முன் அறிவித்தார்.

அதன்படி 26 கவுன்சிலர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

15-வது நிதி குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3.40 லட்சத்தை ஒன்றிய கவுன்சி லர்கள் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளின் கழிப்பறை, சத்துணவு மையம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News