உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-26 06:46 GMT   |   Update On 2023-04-26 06:46 GMT
  • 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
  • கோஷங்களை எழுப்பினர்

அணைக்கட்டு:

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அணைக்கட்டு தாலுக்கா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் பிரகல்நாதன் தலைமையிலும், அணைக்கட்டு வட்ட தலைவர் சதீஷ், வட்ட செயலாளர் ஜோதி, அணைக்கட்டு வட்ட பொருளாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் தூத்துக்குடியில் விஏஓவை அலுவலகத்தில் புகுந்து வெட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இதில் காவல் துறை மெத்தனம் காட்டுவதாக போலீசார் மற்றும் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News