உள்ளூர் செய்திகள்

நகராட்சி தலைவர் பெயரில் போலி பேஸ்புக்

Published On 2023-05-10 10:05 GMT   |   Update On 2023-05-10 10:05 GMT
  • பணம் பறிக்க முயற்சி
  • சைபர் கிரைம் போலீசில் புகார்

குடியாத்தம்,

குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு ள்ளது.

அதன் மூலம் நட்பு வட்டாரத்தில் உள்ள நபர்களுக்கு நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் கேட்பது போல் பணம் தேவை என தகவல் அனுப்பி உள்ளனர்.

உடனடியாக இந்த மோசடி சம்பவம் குறித்து சவுந்தர்ராஜன் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தியிடம் புகார் அளித்தார். வேலூரில் உள்ள சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்க உள்ளார்.

மோசடி நபர்கள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து முக்கிய நபர்களின் பெயர்களில் முகநூல் பக்கங்களை தொடங்கி பணம் கேட்டு மோசடிகளையும் அரங்கேற்றி வருவது தெரியவந்தது.

இந்த போலியான பேஸ்புக் மோசடிகள் குறித்து போலீசார் கூறியதாவது

குடியாத்தம் பகுதி பொதுமக்கள் இதுபோல் மோசடியான பேஸ்புக்கில் வரும் பணம் சம்பந்தமான பதிவுகளுக்கு சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்த பின்னர் பணத்தை அனுப்புமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அவசர உதவி எண் 1930 என் உள்ளது இந்த எண்ணை தொடர்பு கொண்டு இணையவழி குற்றத்தடுப்பு குறித்து ஆலோசனை கேட்டுப் பெறலாம் மேலும் இதுபோல் ஏமாற்றப்பட்டவர்கள் உடனடியாக இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளன

Tags:    

Similar News