உள்ளூர் செய்திகள்
வேலூர் ஜெயில் கைதி ஆஸ்பத்திரியில் அனுமதி
- திருவண்ணாமலையை சேர்ந்தவர்
- திடீரென வலிப்பு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டார்
வேலூர்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 47) சாராய விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு கிருஷ்ணனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.