உள்ளூர் செய்திகள்

விபத்தில் நொறுங்கிய வேன்.

அரசு பஸ் மீது வேன் மோதி விபத்து

Published On 2022-11-21 09:43 GMT   |   Update On 2022-11-21 09:43 GMT
  • அய்யப்ப பக்தர்கள் படுகாயம்
  • போலீசார் விசாரணை

வேலூர்:

ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மினி வேனில் சபரிமலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை கணியம்பாடி அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் மோதியது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. அதில் இருந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் மற்றும் பஸ்சில் இருந்த 2 பயணிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர் தாலுகா போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் வேலூர் திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்ட பிறகு போக்குவரத்து சீரானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News