உள்ளூர் செய்திகள்

மாவட்ட மைய நூலகத்தில் 56-வது தேசிய நூலக வார விழா

Published On 2023-11-21 15:26 IST   |   Update On 2023-11-21 15:26:00 IST
  • கலெக்டர் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

வேலூர்:

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, வேலூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் 56வது தேசிய நூலக வார விழா நடைபெற்று வருகிறது.

விழாவை கடந்த 14-ந்தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

உரைக்களம் நிகழ்ச்சிக்கு காட்பாடி நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.ஆர்.ரவி தலைமை தாங்கி பேசினார்.

வழக்கறிஞர் இந்துமதி, வருவாய்த்துறை சேர்ந்த சிவ.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட மைய நூலக நல் நூலகர் ஏ.கணேசன் வரவேற்றார்.

திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை பதிவாளர் எஸ்.ரமேஷ் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். உரைகளம் நிகழ்ச்சியில் கொஞ்சம் சிந்திக்கலாமா என்ற தலைப்பில் கவிஞர் ச.லக்குமிபதி, வாசிக்கலாம் வாங்க என்ற தலைப்பில் கவிஞர் பொன். செல்வகுமார், யோசிக்கலாம் நீங்க என்ற தலைப்பில் கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் ஆகியோர் பேசினர்.

மக்கள் கவிஞர் கண்ணதாசன் என்ற நூலை கவிஞர் கோ.சித்ரா அறிமுகப்படுத்தி பேசினார். உயரபடி என்ற தலைப்பில் வாசகர் காமராஜ் கவிதை வாசித்தார்.

விழாவில் மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளர் சிவகுமார், காந்திநகர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வேலூர் மாவட்ட மையம் நூலகர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற நூலகர் ரவி விழாவை தொகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News