உள்ளூர் செய்திகள்

காட்பாடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2022-11-04 09:49 GMT   |   Update On 2022-11-04 09:49 GMT
  • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
  • ெஜயிலில் அடைப்பு

வேலூர்:

காட்பாடி தாராபடவேடு தொகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

அவரது பரிந்துரையின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இருவரும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள பலராமன், சீனிவாசனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News