உள்ளூர் செய்திகள்
பொதுத்தேர்வில் தோல்வி- 2 மாணவிகள் மாயம்
- மாணவி மோகனப்பிரியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.
- 2 மாணவிகள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கொப்பூர் கிராமம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமன். இவரது மூத்த மகள் மோகனப்பிரியா (17). இவர் திருவள்ளூரில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.
மாணவி மோகனப்பிரியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனையில் இருந்த மோகனப்பிரியா வீட்டில் இருந்து வெளியே சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மணவாள நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மோகனப்பிரியாவை தேடி வருகிறார்கள்.
இதேபோல திருவள்ளூரை அடுத்த பூண்டி ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி சங்கீர்த்தனா (15). தேர்வில் தோல்வி அடைந்தார். அவரும் மாயமாகி உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.