உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி. 

மயிலாடுதுறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-03-25 09:43 GMT   |   Update On 2023-03-25 09:43 GMT
  • மயிலாடுதுறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  • ஊர்வலத்தை கலெக்்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறையின் சார்பில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஊர்வலத்தை கொடியசைத்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

இந்தியாவில் காசநோய் காரணமாக 5 நிமிடத்திற்கு இருவர் இறந்துவிடுகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 913 நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றோம்.

காசநோய் பரம்பரை வியாதியல்ல.

காசநோய் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும், பெரும்பாலும் காசநோய் நுரையீரலைத் தாக்குகிறது. காசநோய் 80 சதவீதம் நுரையீரலையும், 20 சதவீதம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.

பின்னர் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் சங்கீதா, மாவட்ட கலெக்்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், மருத்துவ அலுவலர்கள் ஜெய்கணேஷ், கார்த்திக், ஆனந்த்பிரபு மற்றும் செவிலியர் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News