உள்ளூர் செய்திகள்

17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த முயற்சி

Published On 2023-08-27 08:46 GMT   |   Update On 2023-08-27 08:46 GMT
  • புகளூர் அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்கள்
  • தடுத்து நிறுத்திய குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள்


வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம் புகளூர் அருகே 17 வயது உள்ள சிறுமிக்கு பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதை அறிந்த, பலர் அந்த சிறுமியை பெண் பார்த்து வந்துள்ளனர். இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் கரூரில் உள்ள குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்ற போலீசார் மற்றும் குழந்தைகள் உதவி மைய அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.


Tags:    

Similar News